Menu Close

Alaipayuthey Kanna Lyrics in Tamil

Alaipayuthey Kanna Lyrics in Tamil

அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள் (Alaipayuthey Kanna Lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிக மிக மகத்துவம் வாய்ந்த பாடலாகும்…..

அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்

அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்

நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா
என் மனம் (அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலெனக்-அளித்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலெனக்-அளித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ?
இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ?

குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள்
போலவே மனது வேதனை மிகவொடு

அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா……….

Alaipayuthey Kanna Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Subscribe for latest updates

Loading